districts

img

கைத்தறி நெசவாளர்கள் கருப்பு கொடி போராட்டம்

ஆரணி, ஆக. 7-

     சட்டவிரோதமாக விசைத்தறியில் கைத்தறி பட்டு சேலை ரகங்களை உற்பத்தி செய்வதை தடை செய்ய வலியுறுத்தி, கைத்தறி நெசவாளர் தின மான ஆகஸ்ட் அன்று 7 தமிழ்நாடு முழுவதும் நெசவாளர்கள் வீடு களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

    அதன் ஒரு பகுதியாக, திருவண்ணா மலை மாவட்டம், ஆரணி சுற்றுவட்டார பகுதி களில் கீழ்ப்பட்டு வடமாதி மங்கலம், சேவூர், சைதாப் பேட்டை, ஆரணி சக்தி நகர், நெடுங்குணம், தேவிகா புரம், காமக்கூர், பெரிய கொழப்பலூர், வாழைப் பந்தல், திருமணி, துருகம், ஒண்ணுபுரம், நடுக்குப்பம், விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நெசவாளர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

     ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கூட்ட மைப்பு நிர்வாகிகள் கே.பி. பரமாத்மன், ஆர். கணேஷ். எஸ். ஜெயக் குமார், கே. அன்பு, பாபு, சிஐடியு நிர்வாகிகள் எம். வீரபத்திரன், பெ. கண்ணன், சி. அப்பாசாமி, இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

     ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம் வாழைப்பந்தல் கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பாக சங்கத் தலைவர் எஸ். கிட்டு தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.  

     இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.