திருவண்ணாமலை,ஜுலை.29-
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் முத்தம்மாள் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலு வலகத்தில், ஜுலை 26 ஆம் தேதி, கட்சி யின் மாவட்டக்குழு கூட்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி கலந்து கொண்டார். செயற்குழு உறுப்பி னர்கள் ப.செல்வன், எம்.பிரகலநாதன், எஸ்.ராமதாஸ், இரா.பாரி, ஏ.லட்சுமணன், கே.வாசுகி, என்.சேகரன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளதாவது,
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி, போளூர், செய்யாறு பகுதிகளில், புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரியமிக்க ஆரணி பட்டு சேலை உற்பத்தியாகிறது. சுமார் 20 ஆயிரம் நெசவாளர்களும், நெசவு சார்ந்த உப தொழில்களுடன் சேர்த்து, சுமார் ஒரு லட்சம் பேர் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உற்பத்தி செய்த பட்டு சேலை கள் விற்பனையாகாததால், நெசவாளர்க ளுக்கு வேலை இன்றி, பட்டினி கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் படி, பட்டு சேலை உள்ளிட்ட 11 ரகங்கள் விசைத்தறியில் (பவர்லூம் ) உற்பத்தி செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளது. மேற்கண்ட சட்டத்தை கைத்தறி துறை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை. சட்டத்தை மீறி விசைத்தறியில் பட்டு சேலை ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விற்பனை யாளர்கள் கைத்தறி சேலைகளை வாங்காமல், அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் ஆரணி, காஞ்சிபுரம், சேலம், ராசிபுரம், நாமக்கல் ஆகிய பகுதி களிலிருந்து, விசைத்தறியில் உற்பத்தி யாகும் பட்டு சேலைகளை குறைந்த விலைக்கு வாங்குவதால், கைத்தறி சேலை கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. நெசவாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
ஒன்றிய, மாநில அரசுகள், விசைத்தறியில் பட்டு சேலை ரகங்கள் உற்பத்தி செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், விற்பனையாகாமல் தேங்கியுள்ள சேலைகளை, தமிழக அரசு கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, ஆரணி கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கூட்டமைப்பு, கடந்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வரும் 31. 07. 2023 அன்று, ஆரணியில் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு முழு ஆதரவு அளிக்கிறது. எனவே, அரசுகள் நெசவாளர்கள் பிரச்சனையில் தலையிட்டு, தீர்வு காணவேண்டும் என்று அந்த அறிக்கையில் சிவக்குமார் தெரி வித்துள்ளார்.