districts

img

விசைத்தறியில் கைத்தறிபட்டு உற்பத்தி செய்வோர் மீது நடவடிக்கை காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், ஜூலை 29-

    வெளி மாநிலங்களி லிருந்து விசைத்தறியில் கைத்தறி பட்டு உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட  வலியுறுத்தி காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழி லாளர்கள் சங்கத்தினர் வெள்ளியன்று (ஜூலை 28)  ஊர்வலம் மற்றும் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.

    காஞ்சிபுரம் உள்ளிட்டு தமிழகம் முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் கைத்தறி தொழிலை நம்பி உள்ள னர். சமீபகாலமாக கைத்த றிக்கு ஒதுக்கப்பட்ட பட்டு சேலை, வேட்டி மற்றும் டவல் உள்ளிட்ட 11 ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்கின்றனர். இந்த சட்ட விரோதமான உற்பத்தியால் கைத்தறி துணிகள் விற்பனையின்றி தேங்கிள்ளன. பட்டு மற்றும் கைத்தறிதுணி தேக்கத்தால் கைத்தறி நெசவாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 12 விதி களை மீறி சட்ட விரோதமாக கைத்தறி பட்டு சேலைகள் விசைத் தறியில் உற்பத்தி செய்யப்படுவதால் தமிழகம் முழுவதும் ரூ.1,000 கோடி, மதிப்பிலான சேலைகள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் 2 லட்சம் கைத்தறி நெசவு  தொழிலாளர்கள் வேலை யிழக்கும் அபாயம்  விசைத்தறியில் பட்டுச் சேலைகளின் உற்பத்தி அதிகமாகிக் கொண்டே இருப்பதால் அதன் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. ஆந்திர மாநிலம், தர்மாவரம் என்ற நகரம் முழுவதுமே விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன.  தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பட்டு சேலைகள் தேங்கியுள்ள சூழலில் தமிழக விற்பனையாளர்கள் வெளி மாநிலங்களில் விசைத்தறி சேலைகளை கொள்முதல் செய்கின்றனர். அதனால் கைத்தறி நெசவா ளர்கள் போதுமான கூலிக்  கிடைக்காமலும், வேலை யிழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே சட்ட விரோத விசைத்தறி உற்பத் தியை தடுக்க வேண்டும். விசைத்தறி சேலைகளால் கைத்தறி பட்டு சேலைகளின் விற்பனை பாதிப்பை தடுக்க வேண்டும். வெளி மாநிலங்களிலிருந்து விசைத்தறியில் கைத்தறி பட்டு ரகங்களை உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் சந்தை படுத்தும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். கைத்தறி ரக சேலைகள் விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும். கைத்தறி  நெசவாளர் வங்கி கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும். உற்பத்தி செய்து தேங்கியுள்ள சேலைகளை தனியார் மற்றும் கூட்டுறவு நிலையங்களில் அரசே குறைந்த லாபத்துடன்  கொள்முதல் செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை  வலி யுறுத்தி காஞ்சிபுரம் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழிலாளர்கள் சங்க (சிஐடியு) காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்  ஜி.எஸ். வெங்கடேசன் தலைமை யில் மாவட்ட கைத்தறி உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      இதில் மாவட்ட செயலா ளர் வி.சிவபிரகாசம் சிஐடியு  நிர்வாகிகள் எஸ்.பழனி, ஜி.வசந்தா, கே.ஜீவா, ஜி.லட்சுமிபதி,  சிஐடியு மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், செய்யாறு கம்பன்  கைத்தறி சங்கம் கணேசன்,  காஞ்சிபுரம் நெசவாளர்கள் கணேசன், சரவணன் ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். கைத்தறி தொழி லையும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குநரிடம் மனு அளித்தனர்.