ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி இயந்திரத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வியாழனன்று (மே 11) துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி, சட்டமன்ற உறுப்பினர் nஜ.எல்.ஈஸ்வரப்பன், வேளாண் இணை இயக்குநர் வடமலை, விற்பனை துறை துணை இயக்குநர் சீனிராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நிர்வாக அலுவலர் முருகன், உதவி நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.