தங்கம்விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னை, நவ.21- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் அதிக அளவில் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறை வதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை செவ்வாயன்று (நவ. 21) சற்று அதிகரித்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840 க்கு விற்பனை செய்யப்படு கிறது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிரா முக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40 க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருபெரும்புதூரில் 9 மின் திருட்டுகள்
சென்னை, நவ.21- திருபெரும்புதூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் மின் நுகர்வோ ருக்கு விதிக்கப்பட்டது. 7 ந் தேதி அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை மையம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருபெரும்புதூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 9 மின் திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் ரூ.9 லட்சத்து 51 ஆயிரத்து 126 இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக் கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.66 ஆயிரம் செலுத்திய தால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்த மான தகவல்களை சென்னை செயற்பொறியா ளர் (அமலாக்கம்) கைபே சிக்கு 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
பள்ளத்தில் விழுந்து போலீஸ் பலி
காஞ்சிபுரம்,நவ.21- ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள வீராணம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் இளங்கோ (வயது 29). காஞ்சிபுரத்தில் போலீசாக பணியாற்றி வந்தார். இவர் திங்க ளன்று இரவு பணி முடித்து விட்டு வீராணம் புதூருக்கு பைக்கில் வந்து கொண்டி ருந்தார். கல்பலாம்பட்டு ஏரி அருகே வாலாஜா-பனப்பாக்கம் சாலை விரிவாக்கத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் அந்த பள்ளத்தில் மழை நீர் நிரம்பியிருந்தது. இதை கவனிக்காத இளங்கோ நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்தார். பலத்த அடிபட்ட தால் மயங்கி தண்ணீரில் மூழ்கினார். இதனை யாரும் பார்க்கவில்லை.இதனால் போலீஸ்காரர் இளங்கோ சம்பவ இடத்திலேயே இறந்தார். செவ்வாயன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீஸ்காரர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நெமிலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக் கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு
காஞ்சிபுரம்,நவ.21- காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வருகின்ற 24-ந் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் நடைபெறும் நாள் மாற்றப்பட்டுள்ளது. இந்தகூட்டம் வருகிற 29-ந்தேதி மாவட்டஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லு நர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 22-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள் ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு மாவட்டஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவருக்கு 3 ஆண்டு சிறை
ஆவடி, நவ. 21- அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருநின்றவூர் சிடிஎச் சாலையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கு 2002ஆம் ஆண்டு ஆவடி அருகே மிட்டனமல்லி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (65) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏழுமலை ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு காவல் படையில் வேலை வாங்கித் தருவதாக மதுரை வீரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மதுரைவீரன் மற்றும் 9 பேர் ரூ. 7.64 லட்சம் பணத்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளனர். அவர் பணத்தை வாங்கிக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2006ஆம் ஆண்டு ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- எண் 1இல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஸ்டாலின் பண மோசடி செய்த ஏழுமலைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6.34 லட்சம் பணத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து ஏழுமலையை புழல் சிறையில் அடைத்தனர்.
ஏலச்சீட்டு நடத்தி ரூ 50 லட்சம் மோசடி
அம்பத்தூர், நவ. 21- அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ 50 லட்சம் பண மோசடி செய்த வியாபாரியை பாதிக்கப்பட்ட வர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் சின்ன கொளுத்துவான்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி (எ) இமானுவேல் (32). இவர் அதே பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மாதந்தோறும் ஏலச்சீட்டு எடுத்தவர்க ளுக்கு ரவி பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார். இதையடுத்து, சீட்டு கட்டியவர்கள் பணத்தை கேட்கும் போதெல்லாம் கொடுப்பதாகக் கூறி கடந்த சில மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் ஆத்திரமடைந்து ஒன்று திரண்டு பண மோசடி செய்த ரவியை பிடித்து போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை பண மோசடி செய்தது தெரியவந்தது. புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.21- மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகைக்கு 27ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் வாயிலாக சென்ற ஆண்டு வரை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெற்று வந்து கடந்த 2023 ஏப்ரல் முதல் நாளது வரை 10 மாதங்களாக பராமரிப்பு உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் எவரேனும் இருந்தால், அத்தகைய நபர்கள் இம்மாதம் 27 ந் தேதிக்குள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை அசல், ஆதார் அட்டை அசல், வங்கிகணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை அலுவலகத்தில் நேரில் சமர்பித்து மாதாந்திர உதவித் தொகை பெற்று பயன்பெறலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கறிக்கோழி வளர்ப்பு விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை
வேலூர்,நவ.21- தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்க முதல் மாநில குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புத்துக்கோயில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி,செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கே.பி. பெருமாள் எதிர்கால பணிகளை முன் வைத்தார். இதில் மாநில பொருளாளர் ஆர்.செந்தில்குமார், மாநில நிர்வாகிகள் கே.சாமிநாதன், ஜீவானந்தம் , எம்.எம்.ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். கறிக்கோழி வளர்ப்பு கூலி விலை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அதிகாரிகள், துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி,நவ.21- கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.11.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வேளாண்மை, கூட்டுறவு துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கின்றனர். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து மனுவை நேரடியாக அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
காலமானார்
திருவண்ணாமலை,நவ.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி கிளை மூத்த உறுப்பினரும் போக்குவரத்துத் தொழிலாளர்- ஓய்வூதியர் சங்க நிர்வாகியுமான உதயகுமார் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. உதயகுமார் உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், வந்தவாசி வட்டார செயலாளர் அப்துல் காதர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வந்தவாசி வட்டாரத் தலைவர் ந.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் மாரிமுத்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஓய்வூதியர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரணமல்லூர் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.