ஓசூர்,ஜன.28- ஓசூர் அருகே பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியில் தமிழகத்திலேயே முதல் முறையாக பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் திறக்கப்பட்டது. இங்கு பொறியியல்,பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டை உயர்த்தும் வகையில் பிஎம்சி குழுமத்தின் தலைவர் பி.குமார் தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிஎன்எஸ் இந்தியா அறக்கட்டளை சார்பில் இந்த பசுமை திறன் பயிற்சி ஆய்வகம் துவக்கப்பட்டுள்ளது. இதனை மைக்ரோ சாப்ட் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் குஞ்சன், டிஎன்எஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ரூபா ஆகியோர் திறந்து வைத்தனர்.