districts

புதிய முறையில் கருணைத்தொகை, போனஸ் வழங்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் பொதுத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜூலை 20 - புதிய முறையில் கருணைத்தொகை, போனஸ் வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை ஏற்றுமதி வளாக ஊழியர்கள் மற்றும் பொதுத் தொழி லாளர் சங்கத்தின் 10வது  ஆண்டு பேரவை ஞாயி றன்று (ஜூலை 17) தாம் பரத்தில் நடைபெற்றது. குறைந்தபட்ச கூலி சட்டத்திற்கு அப்பாற்பட்டு நிர்வாகம் வழங்கும் மொத்த சம்பளத்தை, குறைந்தபட்ச சட்டக் கூலியாக கொள்ள  வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் கரு ணைத் தொகை, போனஸ் வழங்க சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மெப்ஸ் வளாகத்திற்குள் போராட்டம் நடத்த உயர்நீதி மன்றம் விதித்துள்ள தடையை ரத்து செய்ய வேண்டும், மெப்ஸ் நுழைவு  வாயில் முன்பு சுரங்க பாதை, அமைக்க வேண்டும்; தற்போது அமைந்துள்ள மேம்பாலத்தை மெப்ஸ் வரை நீட்டிக்க வேண்டும். பணியிடங்களில் பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப் பட்டது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் இ.பொன்முடி தலைமையில்  நடைபெற்ற இந்த மாநாட்டில் சிஐடியு கொடியை துணைத் தலைவர் இ.சாந்தாராம் ஏற்றினார். துணைச் செயலாளர் வி.முத்தையா வாசித்தார். துணைச் செய லாளர் எஸ்.பாலாஜி வர வேற்றார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மா.விஜயகுமார் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சாதிக்பாஷா வேலை அறிக்கையும், பொருளாளர் டி.ஜெயந்தி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். முறைசாரா சங்க மாவட்ட பொதுச் செயலாளர் யு.அணில்குமார் வாழ்த்துரை வழங்கி னர். சிஐடியு மாவட்டச்  செயலாளர் பா.பால கிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார். துணைத் தலைவர் பி.மகேஷ்வரன் நன்றி கூறினார். சங்கத்தின் தலைவராக இ.பொன்முடி, பொதுச்  செயலாளராக ஏ.சாதிக் பாஷா, பொருளாளராக பி.பால்துரை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.