தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு தூய கொலம்பா அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் ஆதரவற்ற 15 மாணவ,மாணவியர்களுக்கு திமுக மாணவரணி அமைப்பாளர் மாலிக் உசேன், நகரச் செயலாளர் நரேந்திரன் ஆகியோர் உதவித்தொகைகளை வழங்கினர். திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அல்தாப், சந்தோஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.