சென்னை,ஜன.18- தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை பேசியது ஏன் என்பது குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு கருத்து தெரிவித் துள்ளார். அவர் கூறியதாவது:- தமிழ்நாடு, தமிழகம் என்ற பிரச்சினை சட்டமன்றத்துக்கு உள்ளே வரவில்லை. சட்டமன்றத்துக்கு வெளியே தான் இந்த பிரச்சினை வந்தது. தமிழகம் என்று பேசிய வார்த்தையை என்ன நோக்கத்தில் சொன்னேன் என்பதற்கு ஆளுநர் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். சட்டமன்றத்துக்குள் நடந்த விவகாரத் துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆளுநரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். நான் இந்த விஷயத்தில் ஆளுநருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆளுநர் பொது வெளியில் இப்படி சர்ச்சையான வார்த்தையை பேச வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாடு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப் பிடப்பட்டுள்ள வார்த்தைதான். தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காக தமிழ்நாடு பல உயிர் தியாகங்களை செய்துள்ளது. சவுந்தர பாண்டியனார் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாடு என்ற பெயர்வர உயிரை மாய்த்துக் கொண்டார். அண்ணா நோய் வாய்ப்பட்டு இயலாமல் இருந்த நிலையிலும் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டது வரலாறு.
எனவே தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதில் தமிழ கம் என்று அழைத்தது சரியான வார்த்தை யாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் தலைமை பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் சர்ச்சையான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலை வர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு ஆளு நர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் தமிழ் நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதேபோல, தமிழ் நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும். இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்க ளின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளு நரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.