அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை கோட்டம் சார்பில் வெள்ளியன்று (மார்ச் 9)சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அனுசுயா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வழக்கறிஞர் பா.ஹேமாவதி, சங்கத்தின் சென்னை கோட்ட தலைவர் டி.குருசாமி, பொதுச் செயலாளர் கே.வீரராகவன் உள்ளிட்டோர் பேசினர்.