districts

img

கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.26- தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் தேன்கனிக்கோட்டை வட்டம், தளி ஒன்றி யத்தில் ஜவளகிரி  மலைப்பகுதியில் உள்ள அத்தல்வாடி சமவெளியில் சுமார் 20 ஏக்கரில் பன்னீர் கரும்பு சாகுபடி செங்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அரசே இப்பகுதியில் கரும்பை நியாயமான விலைக்கு விவ சாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து மாவட்டங்கள் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் பொருட்களுடன் வழங்கி வருகிறது. அதுபோலவே, இந்த ஆண்டும் தளி பகுதி விவசாயிகளிடம் கரும்பை நேரடியாக கொள்முதல், செய்ய வேண்டும்,தொடர்ந்து ஆண்டு முழுவதும் கரும்பு,வாழை, காய்கறி தோட்டங்களை அழித்து வரும் யானைகளை விரட்டிட வேண்டும், விலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தளிப் பகுதி விவ சாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.