districts

img

பாகூரில் மடிக்கணினி கேட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி,அக்.26-  மடிக்கணினி வழங்க கோரி பாகூரில் வட்டாட்சியர் அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் தரமான மதிய உணவை அரசே வழங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் மாண வர்களுக்கு புரதச்சத்து நிறைந்த  அசைவ உணவு வழங்க  வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு அறிவித்த படி மடிக்கணினி வழங்க வேண்டும்.  அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் பாகூர் கொம்யூன் தலைவர்  யுவராஜ் தலைமை தாங்கினார். மாணவர் சங்கம் மாநிலச் செய லாளர் பிரவீன்குமார், வாலிபர், மாணவர் சங்க நிர்வாகிகள் அஜித், ஜெயராஜ், பாபு, சத்தியசீலன் உட்பட பலர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களி டம் துணை வட்டாட்சியர் விமல்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதி காரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.  முன்னதாக, பாரதி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக் கணித்து ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.