கிருஷ்ணகிரி,டிச.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் வட்ட அமைப்பு குழு கூட்டம் எம்ஜிஆர் நகரில் நடை பெற்றது. வட்ட பொறுப்பாளர் டி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,மாவட்ட செய லாளர் ஜி.கே.நஞ்சுண்டன் சிறப்புரை யாற்றினர். செயற்குழு உறுப்பினர்கள் இருதய ராஜ், பிரகாஷ்,கிருஷ்ணகிரி வட்ட செய லாளர் ராஜா மாவட்ட குழு உறுப்பி னர் லெனின் முருகன்,மாதர் சங்க மாவட்ட செயலாளர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக எல்லப்பன் மல்லிகா திருப்பதி பரிதா முன்னிலை வகித்தனர். சக்கரவர்த்தி வரவேற்றார். பர்கூர் வட்டத்திற்கு கிளை நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம், சுகாதார நிலை யங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர் களை நியமிக்க வேண்டும். சிகரள பள்ளியிலும், வெங்கடாபுரத்திலும் பெரி யார் சமத்துவபுர வீடுகளுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க வேண்டும், கொத்தூர் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வாங்கியவர்களை கிரேஸ் ப்ளூ மெட்டல் ஜல்லி கிரசர் நிறுவனத்தின் தூண்டுதலில் வீடு கட்ட விடாமல் தடுத்து வரும் அரசுஅதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் இருத யராஜ்,பிரகாஷ்,கிருஷ்ணகிரி வட்ட செய லாளர் ராஜா மாவட்டக் குழு உறுப்பி னர் லெனின் முருகன்,மாதர் சங்க மாவட்டசெயலாளர் ராதா கலந்து கொண்ட னர். இதில் 9 பேர் கொண்ட வட்ட குழுவுக்கு டி.சீனிவாசன் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இளைய பாரதி நன்றிகூறினார்.