districts

img

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 1.4.2003 முதல் பணி நியமனம் பெற்ற அனைவரையும் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகில் தர்ணா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். ராசு தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் எம்.காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன், பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற சங்கம் பொறுப்பாளர் ரவி, காப்பீட்டு ஓய்வூதியர் சங்கம் பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.


தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார், மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 

;