செங்கல்பட்டு, அக்.8- போராடாமல் இருந்தால் இருக்கும் உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்து உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு கூறினார். செங்கல்பட்டில் சனிக் கிழமை (அக்.8) பேரணி யுடன் துவங்கிய சங்கத்தின் மாநில பிரதி நிதித்துவ பேரவையில் அவர் பேசியதாவது; போராடுவது இன்றைய காலகட்டத்தில் அமைப்பு ரீதியாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் தவிர்க்க முடியாத கடமையாகி யுள்ளது. உழைக்கும் வர்க்கம் போராடாமல் எந்த உரிமையையும் பெற முடி யாது என்ற நிலைமை மாறி இப்போது, போராடாமல் விட்டு விட்டால் இருக்கும் உரிமைகள்கூட பறிபோய் விடும் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட உழைப்பாளி வர்க்கம் போராடாவிடில் அதன் தரம் தாழ்ந்து விடுவதோடு, ஒட்டுமொத்த சமூகமும் முன்னேற்றமின்றி தாழ்ந்து அழியும். எனவே, சமர சமற்ற தொடர் போராட்டங் களை நடத்தி வலுவான இயக்கத்தை கட்டி அமைப்பதே நமது முதல் கடமையாகும். உடனடித் தேவைக்காக வும் கோரிக்கைகளுக்காக வும் நடத்தும் போராட்டங் கள் அனைத்தும் சமூக மாற்றத்திற்காக நடத்தப்படும் நெடிய போராட்டத்தின் ஒரு பகுதியே என எங்களது ஆசான் எம்.ஆர்.அப்பன் அடிக்கடி கூறுவார். பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் அமல் படுத்தப்படும், சரண்டர், வரையறுக்கப்பட்ட ஊதியம், காலிப்பணி யிடங்களை நிரப்புதல் போன்ற திமுகவின் தேர் தல் வாக்குறுதிகளும் இது நாள்வரை நிறைவேற்றப் படவில்லை. ஊதிய முரண்பாட்டை தீர்க்க வேண்டுமென்ற கோரிக்கை ஒரு தலைமுறை யாக நிலுவையில் வைக்கப்பட்டிருக்கிறது . காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற முறையீடுகள் முற்றாக நிராகரிக்கப்பட்டு ஆறு லட்சம் காலிப் பணியிடங்கள் அரசுத்துறைகளில் காலியாக விடப்பட்டுள்ளது. இதனால் ஆறு லட்சம் தமிழக இளைஞர்களின் எதிர்காலமும் வாழ்வா தாரமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டங்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி இருக்கிறோம். இந்தப் பேரவையில் நாம் மேற் கொள்ளும் ஆக்கபூர்வமான முடிவுகளும் நடவடிக்கை களும் ஆட்சியாளர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். நம்முடைய உரிமைகளை மீட்பதற்காக போராட்ட அறிவிப்புகளை முன்னெடுப்போம் இவ்வாறு அன்பரசு பேசினார்.