districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்...

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (செப் 19), திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகங்கள், பிடிஓ அலுவலகங்கள், வேளாண்மை துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி முகமை, வணிகவரித்துறை, திருத்தணி கோட்டாட்சியர் ஆகிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.மாவட்ட தலைவர் க.திவ்யா, மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா, பொருளாளர் ப.மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.