தாராபுரம், ஏப்.26- தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததை கண் டித்து செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக் கைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளி யிடப்படவில்லை. இதை கண்டித்து தாராபுரம் அரசு மருத்துவமனை, வட் டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், நகராட்சி அலுவல கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு வட்டக்கிளை தலைவர் கே. செந்தில்குமார் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தின் போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். சத்து ணவு அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், ஊர்ப்புற நூலகர் உள்ளிட்ட சிறப்பு கால முறை மற்றும் தொகுப்பூதியம், மதிப்பூ தியம் பெற்றுவரும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறைகளில் தனியார்ம யப்படுத்தும் விதமாக அவுட்சோர்சிங் முறையில் பணியில் அமர்த்துதல் மற் றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள 115, 139, 152 அரசாணை களை திரும்ப பெற வேண்டும். அரசு துறைகளில் காலியாகஉள்ள பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக் கிளை செயலாளர் இல.தில்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பூரில் நெடுஞ் சாலைத்துறை அலுவலகம், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வருவாய் வட் டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு வேளாண் அலுவலகம் உள்ளிட்ட இடங் களில் நெடுஞ்சாலைதுறையினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.