districts

img

100 மாதங்களாக வழங்காமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்குக அரசு போக்குவரத்து ஊழியர்கள் வலியுறுத்தல்

கடலூர், மார்ச் 21- ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு 100 மாதங்களாக வழங்காமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை நிலு வையுடன் வழங்க வேண்டும் என்று மண்டல கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் நல அமைப்பு சார்பில் மண்டல கூட்டம் கடலூரில் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் எஸ்.கண்ணுசாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார் .ஓய்வு பெற்ற அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் உதவி செய லாளர் எம். மருதவாணன் மாநில துணைச் செயலாளர் ஜேம்ஸ் கஸ்பாராஜ், பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன், ஊழியர்கள் நல அமைப்பின் துணை பொதுச் செயலாளர் எம். முத்துக்குமரன் , மண்டல பொருளாளர் ஆர். பழனிவேலு ஆகியோர்   கலந்து கொண்டு பேசினர். நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மதிப்பளித்து உடனடியாக கோரிக்கைகளை நிறை வேற்ற அரசு நிர்வாகம் முன்வரவேண்டும், அரசு ஊழியர்களுக்கு உள்ளது போன்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும்போது கிடைக்க வேண்டிய பணபலன்கள் அனைத்தையும் உடனே வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.