தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சே.பிரபாகரனின் மாமனாரும், சமூகச் செயற்பாட்டாளர் டாக்டர் அ.தா.நந்தினியின் தந்தையுமான கு.தாமோதரன் சனிக்கிழமையன்று (செப்.2) எழும்பூரில் காலமானார். அவருக்கு வயது 67. அன்னாரது உடலுக்கு சிபிஎம் மத்தியசென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் இ சர்வேசன், வே ஆறுமுகம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.