பாடப்புத்தகத்திலிருக்கும் அறிவியல் கேள்விகள், பொது அறிவு வினாக்கள், சில அடிப்படை பயன்பாட்டு கணக்குகள், சமீபத்திய நிகழ்வுகள் போன்ற மாணவர்கள் சிந்தித்து எழுதும் வகையில் துளிர் வினா-விடை தேர்வு போட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதனன்று (பிப் 22) நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 12 ஒன்றியங்களிலிருந்து 44 பள்ளிகளில் 3500 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதனை அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மோசஸ் பிரபு ஒருங்கிணைந்தார்.