சிபிஎம் கிளை மாநாடுகள்
சிபிஎம் கிளை மாநாடுகள்
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டக்குழுவிற்குட்பட்ட, சிபிஎம் கிளை மாநாட்டில் தேர்வு செய்யபட்ட கிளை செயலாளர்கள் விவரம்:
குன்றத்தூர் ஆத்தனஞ்சேரி கிளை - எஸ்.ஜெயபால்
கரசங்கால் அ - ஆர்.நந்தகோபால்
கரசங்கால் ஆ - எம்.பிரபாகரன்
கரசங்கால் பெண்கள் - எஸ்.ரேணுகாதேவி
கு.பெரியார் நகர் - எஸ்.சதாசிவம்
சக்திநகர் - டி.பிரேம்குமார்
சாலமங்கலம் அ கிளை - கே.அண்ணாதுரை
சாலமங்கலம் ஆ - ஏ.குமார்
சிக்கராபுரம் - எம்.மோகனன்
சீனுவாசபுரம் - ஆர்.தேவேந்திரன்
செரப்பனஞ்சேரி - கே.செல்வம்
சோமங்கலம் - பி.கங்காதரன்
படப்பை - எஸ்.ஓசுரான்
படப்பை பெரியார் நகர் அ - கே.வெங்கடேசன்
படப்பை பெரியார் நகர் ஆ - எஸ்.உதயகுமார்
படப்பை பெரியார் நகர் பெண்கள் - ஜி.சித்ரா
பரணிபுத்தூர் பெண்கள் - டி.பிரேமா
மூகாம்பிகை நகர் - வி. ரமேஷ் பாபு
ராஜூவ்காந்தி நகர் - கே.மயில்வாகனன்
காஞ்சிபுரம் வட்டம்
குருவிமலை ஏ கிளை - வி. வேலு
குருவிமலை பி களை - பி.செண்பகம்
குருவிமலை சி கிளை - ஆர்.சக்திவேல்
ஐயம்பேட்டை - எஸ்.லோகநாதன்
திமையன்பேட்டை - ஆர்.ஜீவானந்தம்
வள்ளுவப்பாக்கம் மாதர் கிளை - பி.செல்வி
குண்டுகுளம் ஏ கிளை - எஸ்.சீனிவாசன்
குண்டுகுளம் பி கிளை - டி.விஜயகுமார்
புஞ்சையரசந்தாங்கள் - கே.அஞ்சலி
செட்டியார் பேட்டை - கே.செல்வம்
ஆவடி தொகுதி
ஸ்ரீதேவி நகர் கிளை - ஆர்.ராஜேந்திரன்
நந்தவன மேட்டூர் கிளை - சி.சடையன்
காமராஜ் நகர் கிளை - பி.குணசேகரன்
கக்கன்ஜி நகர் கிளை - கே.வடிவேல்
கோபாலபுரம் கிளை - பி.ரகுநாதன்
தேவராஜபுரம் கிளை - இ.கெங்காதுரை
கலைஞர் நகர் கிளை - டி.முருகன்
பூம்பொழில் நகர் கிளை - கே.விஸ்வாம்பரன்
திருமுல்லைவாயில் கிளை - வி.கே.மோகன்
இந்திரா நகர் கிளை - ஜெ.கனகராஜ்
தந்தை பெரியார் நகர் கிளை - டி.ராமமூர்த்தி
அன்னை சத்யா நகர் கிளை - ஆர்.சுப்புராஜன்
திருவேற்காடு கிளை - எஸ்.வெங்கடேசன்
கரலப்பாக்கம் கிளை - ஆர்.சிவா
பள்ளியில் வாயு கசிவு- மயங்கி விழுந்த மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை,அக்.25- திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக புகார் வெளியாகியுள்ளது. பள்ளியில் திடீரென வாயு நெடி வீசியதால், மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில், மாணவர்கள் சிலர் மயக்கம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த 3 மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியில் இருந்து மாணவர்களை வெளியேற்றப்பட்டதால், குழந்தைகளை அழைத்து செல்ல பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்துள்ளனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வாயு வெளியேறியதா, அல்லது பள்ளியில் உள்ள ஆய்வு கூடத்தில் இருந்து வாயு வெளியேறியதா ? என விசாரணை நடைபெற்று வருகிறது.
தி.நகரில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு
சென்னை,அக்.25- தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.நகர் உள்ளிட்ட கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. வழக்கம்போல தி.நகரில் தினமும் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் வரும் மக்கள், வாகனங்களை பல கிலோ மீட்டருக்கு வெளியே விட்டு நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்களுக்கு வசதியாகவும், தீபாவளி கூட்ட நெரிசலை யொட்டியும் பல மாதங் களாக மூடப்பட்டுள்ள உஸ் மான் சாலை மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. உஸ்மான் சாலை மேம் பாலம் கடந்த ஆண்டு டிசம்பரில் மூடப்பட்டது. இந்த பாலத்தில் 80 கார்கள், 1000 பைக்குகள் வரை நிறுத்த முடியும் என தெரி விக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு சென்னை,அக்.25- தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில் வெள்ளி யன்று சற்று அதிகரித் துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,295-க்கும் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,360-க்கும் விற்பனையா கிறது. வெள்ளி விலை அதிரடி யாக குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கும் கிலோ வுக்கு மூவாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் முதலமைச்சருக்கு சிஐடியு கடிதம்
சென்னை, அக். 25 - பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கோரியுள்ளது. இது தொடர்பாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநகர போக்குவரத்து கழக வியாசர் பாடி பணிமனையை சார்ந்த பேருந்து, கோயம்பேடிலிருந்து அக்.24ந் தேதி பயணி களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த பேருந்தில் பயணி ஒருவர் நடத்துனர் ஜெகன் குமாரிடம் தகராறு செய்துள்ளார். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நடத்துநர் மரணமடைந்துவிட்டார். தமிழகம் முழுவதும் குறிப்பாக, சென்னை நகரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றது. இதனால் ஓட்டுனர். நடத்துனர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் அடிப் படையில் கூடுதல் பேருந்து வசதி செய்வது, பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனை களைத் தவிர்க்க தொழிற்சங்கங்களோடு ஆலோசித்து புதிய வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட வேண்டும். பணியில் இருக்கும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டால் அது சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப் படும் என்ற புரிதலை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பணியின்போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மரணமடைந்த நடத்துனர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காவல் துறையினர் தாக்கப்படும்போது இதைவிட கூடுதல் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கு வதோடு, வாரிசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
காலி பணியிடங்களை நிரப்புக!
அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்
மதுராந்தகம்,அக். 25- பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிட தமிழக அரசை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது சங்கத்தின் 14 வது மதுராந்தகம் வட்ட மாநாடு மதுராந்தகத்தில் வட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது அஞ்சலி தீர்மானத்தை உமா மகேஸ்வரி வாசித்தார் மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட துணை தலைவர் புஷ்பலதா பேசி னார் வட்ட செயலாளர் சுதர்சன் வேலை அறிக்கையும், உமா மகேஸ்வரி வரவு செலவு அருகே சமர்ப்பித்தனர் மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.பூங்குழலி, ஓய்வு பெற்ற சங்கத்தின் நிர்வாகி வி.பொன்னுசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசுதா வி.சுதர்சனன், சிவா ஆகியோர் பேசினர் மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முகமது உசேன் பேசினார் தீர்மானங்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அனை வருக்கும் வழங்க வேண்டும், சத்துணவு ,அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்புற நூலகர்கள் எம்.ஆர். பி செவிலியர்கள், மதிப்பூதியம், தொகுப் பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், மதுராந்தகம் வட்டத்தை இரண்டாகப் பிரித்து அச்சரப்பாக்கத்தை தலைமை இடமாகக் கொண்டு தனி வட்டமாக பிரிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழு தேர்வு சங்கத்தின் மதுராந்தகம் வட்டத் தலைவர் என்.பாலாஜி, செயலாளராக ஜி.சுதர்சன், பொருளாளராக பிரான்சிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.