சென்னை,ஜூலை 14-
சென்னை புறநகர் பகுதி யான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ளபகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து தாம்பரம் மாநக ராட்சியாக தரம் உயர்த் தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்துநடந்து வருகிறது. குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடி யிருப்புகளில் வசிப்ப வர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை ‘என்றுபிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், 50 வீடு களுக்கு மேல்இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு களில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு களில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக் கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையைஅந்தந்த குடியிருப்பில் வசிப்பவர் களே உரமாக்கி கொள்ள வேண்டும். காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலக்ட் ரானிக் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணி யாளர்கள் மூலம் அகற்றப் படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடி யிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப் பவர்கள் மத்தியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.