districts

img

விநாயகர் ஊர்வலம்: காவல்துறை கொடி அணிவகுப்பு

திருவண்ணாமலை,செப்.19 - திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி நகரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், செவ்வா யன்று (செப்.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் தலை மையில் காவல்துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. வந்தவாசி சன்னதி தெருவில் தொடங்கி அணிவகுப்பு அங்காளம்மன் கோவில் தெரு, தேரடி தெரு. பஜார் தெரு, பழைய பேருந்து நிலையம், கோட்டை மூலை ஆகிய முக்கிய வீதிகள் வழியாக சென்று பூமாலை செட்டி தெருவில் நிறைவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வந்தவாசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்தி  மற்றும் 200-க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.