சென்னை, ஜன.9- 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் 19 ஆம் தேதி முதல் 31 வரை சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடை பெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக சென்னை நேரு விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்ட வருகிறது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கான பிரத்யேகமாக தயாராகும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று (ஜன.9) ஆய்வு மேற்கொண்டார்.