வேலூர், நவ.14- வேலூர் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார். அரசு வேலூர் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்ற முதன்மைச் செயலாளர், அங்கு 108 ஆம்புலன்ஸ் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிகிச்சை கள் மற்றும் பதிவுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து கேட்டறிந்து, சமையல் அறைக்கு சென்று அங்கு பணி யாளர்களிடம் உணவு சமைக்கும் முறை கள் மற்றும் மளிகை பொருட்கள் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆண்கள் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு சென்ற முதன்மைச் செய லாளர் அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் அவர்களது உதவி யாளரிடம் சிகிச்சை முறைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். தொடர்ந்து அதே பிரிவில் உள்ள கழிவறை பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வசதி மற்றும் அவர்களுக்கு தேவையான இதர அடிப்படை வசதி களை ஆய்வு செய்து, கழிவறையை முறை யாக பராமரிக்கும்படி சம்பந்தப்பட்ட அலு வலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மருத்துவமனையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையங்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவமனை யின் ஒவ்வொரு தளத்திலும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை மருத்துவக் கல்லூரி முதல்வர் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர் சந்திப்பு முதன்மைச் செயலாளர், “புதிதாக ரூ.197 கோடியில் கட்டப்பட்டு பெண்ட் லேண்ட் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்த பிறகு அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும்” என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சி யர் பெ. குமாரவேல் பாண்டியன், மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.எஸ். பாப்பாத்தி, துணை முதல்வர் மரு. கௌரி வெளி கொண்டலா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு. ரதி திலகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.