districts

img

சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை

திருவள்ளுவர் தினமான செவ்வாயன்று (ஜன.16) நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடசியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆயிரம் விளக்கு பகுதி கட்டிடத் தொழிலாளர் சங்க பகுதி தலைவர் இ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.முருகன், எஸ்.கே.முருகேஷ், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வெ.இரவீந்திர பாரதி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், முறைசாரா சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வி.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.