திருவள்ளூர், ஏப். 7- திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமையன்று (ஏப் 6), தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சம்பத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அரசியல் தலைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கூட்டணி தர்மத்திற்காக பாஜகவை ஆதரித்தோம் விமர்சிக்கவில்லை என்கி றார் எடப்பாடியார், கூட்டணி தர்மம் என்றால் என்ன பொருள். வாக்க ளித்த மக்களுக்கு துரோகம் செய்வதல்ல, கூட்டணி தர்மம் என்பது பாஜக விற்கு ஜால்ரா போடு வதல்ல. குடியுரிமை திருத்த சட்டத்தின் போது அதிமுக உறுப்பினர்களும் பாமக உறுப்பினர்களும் மாநி லங்களவையில் எதிர்த்து வாக்களித்து இருந்தாலே அந்தக் குடியுரிமை சட்டம் வந்திருக்காது. அத்தகைய பாவத்தை செய்தவர்கள் தான் அதிமுகவும் பாமக வும் என்பதை சுட்டிக்காட்டு கிறோம். ஜம்மு காஷ்மீர் மாநி லத்தில் ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்து, அந்த சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் 370 சிறப்பு பிரிவை ரத்து செய்துவிட்டு, அந்த மாநிலத்தை இரண்டாக பிரித்தார்கள். லடாக் ஒரு யூனியன் பிர தேசம், ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசம் என பிரித்துள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமி அவர்களே அதேபோல தமிழ கத்தை சென்னை ஒரு யூனியன் பிரதேசம், மற்றவை ஒரு யூனியன் பிரதேசம் என பிரித்தால் ஏற்றுக் கொள்வீர்களா. எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, நீங்கள் பாஜ கவை எதிர்ப்பது உண்மை என்றால் நடைபெற்றுக் கொண்டிருக்கிற தேர்த லுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு பாஜகவை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லத் தயாரா. அதிமுக வின் நிலைப்பாட்டில் மர்மம் இருக்கிறது. காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் தத்துவம் தான் மோடிக்கு வழிகாட்டுகிறது. எனவே இந்தியாவை பாதுகாக்க மோடி வகையறாக்களை தோற்கடிக்க வேண்டும்.இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் பி.ரவி (ஒன்றிய கவுன்சிலர்), விசிக மாவட்ட செயலாளர் அருண்கவுதமன், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, துணை நிர்வாகி கனல் காசிநாதன், காங்கிரஸ் நிர்வாகி ஒன்றிய கவுன்சிலர் சிவசங்கர் ஆகி யோர் பேசினர்.திமுக கிழக்கு மாவட்டச் செய லாளர் டி.ஜெ.கோவிந்த ராஜன், எம்எல்ஏ, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திர சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஎம் கிளை செயலாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.