சென்னை, டிச. 26 - குடிசை பகுதி மக்களை வெளியேற்றாமல் அதே பகுதியில் அல்லது அருகா மையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் 23ஆவது வடசென்னை மாவட்ட மாநாடு ஞாயி றன்று (டிச.26) தோழர் மைதிலி சிவராமன் நகர் (ஆவடி), தோழர்கள் டி.என்.நம்பிராஜன், எம்.செல்லாராம், ஏ.ஜி.காசி நாதன் நினைவரங்கில் தொடங்கியது.
பொதுமாநாடு
இந்த மாநாட்டை யொட்டி செந்தொண்டர் பேரணி நடைபெற்றது. வி.கமலநாதன் தலைமை யில் கொண்டு வரப்பட்ட மாநாட்டுக் கொடியை செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணனும், அ. விஜயகுமார் தலைமையில் கொண்டுவரப்பட்ட மைதிலி சிவராமன் நினைவுச் சுடரை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனும், எஸ்.பாக்கியலட்சுமி தலை மையில் கொண்டு வரப்பட்ட டி.என்.நம்பிராஜன் நினைவுச்சுடரை மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங்கும் பெற்றுக் கொண்டனர். வி.ரவிக்குமார் தலை மையில் கொண்டுவரப்பட்ட எம்.செல்லாராம் நினைவுச்சுடரை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜ னும், சு.லெனின் சுந்தர் தலைமையில் கொண்டு வரப்பட்ட ஏ.ஜி.காசிநாதன் நினைவுச் சுடரை செயற் குழு உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரனும், எஸ்.பவானி தலைமையில் கொண்டு வரப்பட்ட எவரெஸ்ட் சண்முகம் நினைவுச்சுடரை செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகமும் பெற்றுக் கொண்டனர். வி.செல்வராஜ் தலை மையில் கொண்டு வரப்பட்ட கிருஷ்ணன் குட்டி நினைவுச் சுடரை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமனும், நிதிஷ்குமார் தலைமையில் கொண்டு வரப்பட்ட மாணிக்கம் நினைவுச்சுடரை செயற்குழு உறுப்பினர் எஸ்.ராணியும், சரவணன் தலைமையில் கொண்டு வரப்பட்ட தனபால் நினைவுச்சுடரை செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமனும் பெற்றுக் கொண்டனர். மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் ஆர்.ராஜன் ஏற்றினார். மாநாட்டிற்கு செயற் குழு உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழு தலைவர் ம. பூபாலன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மூத்த நிர்வாகி களை தலைவர்கள் கவுர விக்கப்பட்டனர். மாநாட்டை தொடங்கி வைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசி னார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்டச் செய லாளர் எல்.சுந்தர்ராஜன் அமைப்பு மற்றும் வேலை அறிக்கையையும், செயற்குழு உறுப்பினர் வி.ஜானகிராமன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். இதன்பின்னர் செய்தி யாளர்களிடம் ஜி.ராம கிருஷ்ணன் கூறியதாவது: பெருவெள்ளம் வரும் போதெல்லாம் சென்னை மாநகரம் தத்தளிக்கிறது. எனவே கொசஸ்தலை ஆறு,அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும். சென்னை நகரில் குடியிருப்பவர்களை வெளியேற்றாமல் அதே பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். தனியார் நுண்நிதி நிறுவனம் வழங்கும் கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். நீதி மன்றம் வழிகாட்டியபடி பள்ளி, பெண்கள் பணிபுரி யும் இடங்களில் விசாக கமிட்டியை அமைக்க வேண்டும். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குகிறது. இதனை தடுக்க இலங்கை அரசுடன், ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள மீன வர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.