தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஜி.ஆனந்தின் தந்தை எல்.கோபால் படத்திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (பிப்.10) கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. உருவப்படத்தை எல்.நாராயணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமீர் ஐதர் கான், சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளைக்கு ஆனந்தின் தாயார் ஜி.அஞ்சனாதேவி, நன்கொடையாக அறக்கட்டளை நிர்வாகி இ.சர்வேசனிடம் ரூ25ஆயிரம் வழங்கினார். மாவட்ட நீதிபதி பிரகாஷ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் துணை பொது மேலாளர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.