சென்னை, ஜன.8- சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக் கூடிய ரயில்களும், இரவு நேரங்க ளில் புறப்படக்கூடிய ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் இயங்குகிறது. கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஞாயிற்றுக்கிழமை (ஜன.9) முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் மறுநாள் (திங்கள்) காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னையில் மாநகர பேருந்துகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தினமும் 2,500 பேருந்துகள் பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும். இந்த பேருந்துகள் அனைத்தும் நாளை முழுமையாக நிறுத்தப்படுகிறது. இதே போல ஆட்டோக்கள் ஓடுவ தற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்களை ஏற்றி செல்லக்கூடிய எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. விமானம், ரயில் பயணம் மேற் ்கொள்ளுபவர்கள் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்களிலோ செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பய ணத்தின்போது அதற்கான டிக்கெ ட்டை வைத்திருக்க வேண்டும்.
மெட்ரோ ரயில் மெட்ரோ ரயில் சேவை ஞாயி றன்று முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளது. வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்க ப்படுகிறது. மின்சார ரயில்களை பொறுத்தவரை 50 விழுக்காடு நாளை இயக்கப்படுகின்றன. 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவிலான சேவை இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறி வித்துள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம் மார்க்கத்தில் 113 ரயில்களும், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டிக்கு 60 சேவைகளும், கடற்கரை- வேளச் சேரி வழித்தடத்தில் 36 சேவைகளும், கடற்கரை- செங்கல்பட்டு வழித் தடத்தில் 120 ரயில்களும் இயக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆவடி பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் சர்வீசுகளும் குறைந்த அளவில் இயக்கப் படுகிறது. மொத்தம் 343 ரயில்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக 660 மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
தற்போது முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறை ஊழியர் கள் செல்வதற்காக சேவை குறைக் கப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில் கள் மட்டும் முழு அளவில் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படு கிறார்கள். சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பகல் நேரங்களில் செல்லக் கூடிய ரயில்களும், இரவு நேரங்க ளில் புறப்படக்கூடிய ரயில்க ளும் நாளை வழக்கம் போல் இயங்குகிறது. ரயில் நிலையங்க ளில் வாடகை ஆட்டோ, கார்கள் பய ணிகளின் பயணத்துக்கு அனு மதிக்கப்படுகிறது.