திருவள்ளூர், ஆக.2-
பழவேற்காடு ஏரி இந்தியாவின் மிகப்பெரிய 2-வது உவர்ப்பு நீர் ஏரி ஆகும். இதனை சுற்றி 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் சுமார் 1500 க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து வருகின்றனர். சுமார் 10 ஆயிரம் மீனவர்க ளுக்கு இது முக்கிய வாழ்வாதார இடமாக உள்ளது.இங்கு 150-க்கும் மேற்பட்ட வகையான மீன்கள்,இறால்,நண்டுகள், பிடிபட்டு வருகிறது.
பழவேற்காடு மீனுக்கு என்று தனி மவுசு உண்டு. பெரும்பாலும் இங்கு பிடிக் கப்படும் மீன்கள் உடனடி யாக விற்பனைக்கு கரைக்கு கொண்டு வரப்படுவதாக ஐஸ்கட்டிகள் பதப்படுத்தா மல் உடனடியாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் பழவேற்காடு மீன்கள் வாங்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பழவேற்காட்டில் மீன் விற்பனை களைகட்டி காணப்படுகிறது.
மேலும் பழவேற்காடு ஏரியில் பிடிக்கப்படும் நண்டு, இறால் களுக்கு தனி சுவை உண்டு. இதனால் இங்குள்ள நண்டு, இறால் களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஏரி யில் பிடிக்கப்படும் நண்டு கள் சணல் மூலம் உயிருடன் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த கட்டு நண்டு மிகவும் பெயர் போனவை.
ஒரு நண்டு 50 கிராம் முதல் ஒன்றரை கிலோ விற்கு மேல் இருக்கும். பழவேற்காடு நண்டுக்கு தற்போது மவுசு மேலும் அதி கரித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராள மானோர் பழவேற்காடு பகுதிக்கு வந்து தங்களுக்கு பிடித்தமான பெரிய நண்டுகளை வாங்கி செல் கிறார்கள். ஒரு கிலோ நண்டு ரூ.400 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது.