districts

img

அரசு மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட 2 குழந்தைகள் மீட்பு

காஞ்சிபுரம், ஆக.12-

      காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட இரு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.  

    உத்திரமேரூர் தாலுகா வெங்கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித் தொழிலாளி. இவரது மனைவி காமாட்சி.  2-வது பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.  

     மூர்த்தியின் அண்ணன் ஏழுமலை தனது மனைவி குள்ளம்மாள், மகள் சவுந்தர்யா (6) மற்றும் மூர்த்தியின் மகன் சக்திவேல் ஆகியோருடன் காஞ்சிபுரம் அரசு  மருத்துவமனைக்கு சென்றார். பிரசவத்திற் காக அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சியை பார்த்துக்கொள்வதற்காக மருத்துவமனைக்குள் குள்ளம்மாள் சென்றபோது கடந்த 8-ந்தேதி இரவு 8 மணியள வில் குழந்தைகள் சக்திவேல், சவுந்தர்யா ஆகியோரை வெளியில் விட்டுவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது குழந்தைகளை காணவில்லை. இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறை யால் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடை பெற்றது. விசாரணையில் 50 வயது மதிக்கத் தக்க பெண் ஒருவர் காணாமல் போன குழந்தைகளை அழைத்து செல்வது கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தது. தீவிர விசாரணையில் காஞ்சிபுரம் நகரம் வழியாக வாலாஜாபாத் தாலுகா அஞ்சூர் கிராமத்திற்கு இரு குழந் தைகளை அந்த பெண் அழைத்து சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் அஞ்சூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்ற லட்சுமி என்ற  பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த  வெங்கடேசன் (60) கைது செய்யப்பட்டு  தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள னர். மேலும் தப்பியோடிய லட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.