விடுதலை போராட்ட வீரர் தகைசால் தமிழர் தோழர் சங்கரய்யாவுக்கு வழங்க இருந்த கவுரவ டாக்டர் பட்டத்திற்கு ஒப்புதல் வழங்காத தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கடிதம் அனுப்பும் போராட்டம் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ் பாரதி, கிளை நிர்வாகிகள் சாரதி, சத்யா, புஷ்பராஜ், சாரதி, பசுபதி, முத்துப்பாண்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.