கிருஷ்ணகிரி, மே 23- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆதித்யா கண் மருத்துவமனை தலைவர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமை மு.தம்பிதுரை துவக்கி வைத்தார். முகாமில் விழித்திரை பரிசோதனை, பார்வை கோளாறு, சர்க்கரை நோயால் ஏற்படும் பார்வை இழப்பு, கண் அழுத்த நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்ப்பட்டன. இதில் சுமார் 600 பேர் பரிசோதித்து கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை இயக்குநர் ராஜா முத்தையா, ஆர்எம்ஓ பார்வதி, மருத்துவர்கள் திலக், புருஷோத்தமன், வரட்டனபள்ளி ஊராட்சி தலைவர் மகாலஷ்மி, கல்லூரியின் செயலாளர் டி.லாசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.