நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 150 மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மூலமாக நேரடியாகவும் கற்போர் வட்டத்தின் 10 மையங்கள் வாயிலாக 300 மாணவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளை திங்களன்று (மே-29) திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.