districts

img

விஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் இலவச சேர்க்கை

வேலூர், ஆக. 5 -

     வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில், அரசுப் பள்ளிகளில் படித்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள் - ஸ்டார்ஸ் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இலவசமாக படிப்பதற்கு சேர்க்கை  ஆணைகள் வழங்கும் விழா வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதன் முன்னிலை வகித்து மாணவர்க ளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

     இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் ஜி.அறி வொளி, “மாணவர்கள் எந்த துறையை தேர்வு செய்தாலும் அதில் முயற்சியும், இலக்கும் இருக்க வேண்டும்”என்றார்.

     வாழ்க்கையில் சாதிப்பதற்கு பாட புத்தகம் மட்டும் போதாது. அதையும் தாண்டி  பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும்  புத்தகம் வாசிக்கும் பழக்கம் தேவை என்றும்  அவர் கூறினார்.

    பொருளாதாரம் ஒருவரின் படிப்புக்கு தடையாக இருக்காது. தடைகளை தாண்டி நாம் வெளியே வர வேண்டும். அந்த தடை களை எல்லாம் உடைத்தெறிந்து முன்னேற் றம் என்ற ஒரே குறிக்கோளுடன் சென்றால் எதையும் சாதித்து விடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

    டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வளம் மேம்பாட்டு துறை  தலைவர் கே.எம்.சுசீந்தி ரன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, பல்கலைக் கழக வேலைவாய்ப்பு துறை இயக்குநர் சாமுவேல் ராஜ்குமார் ஆகியோர் கலந்து  கொண்டனர். ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப் பாளர் மீனாட்சி வரவேற்றார். பேராசிரியை செல்வராணி நன்றி கூறினார்.