ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் வசிக்கும் இஸ்லாமிய, கிருத்துவ சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் தையல் இயந்திரம் வழங்கக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்த ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகுதியுடைய 27 நபர்களுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். மேலும் வீட்டுமனை வழங்குவதற்கு மனுக்களை பரிசீலனை செய்து அறிக்கை அளிக்குமாறு வருவாய் துறைக்கு பரிந்துரை செய்தார்.