சென்னை, ஆக. 1 -
சென்னை எம்.ஜி.ஆர் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீவட்சன் விஜய ராகவன். அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் பிரபல தனியார் இன்சூரன்ஸ் (காப்பீட்டு) நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். மேலும் காலாவதியாக உள்ள இன்சூரன்ஸ் பாலிசியை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் தனது ‘கூகுள் பே’ மூலம் ரூ. 60 ஆயிரம் பணத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால், போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய கும்பல் நூதனமான முறை யில் பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்து விஜய ராகவன் அதிர்ச்சிய டைந்தார்.
அதேபோல் கே.கே. நகர் அடுத்த விஜயராகவபுரம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசிய மர்ம கும்பல் மற்றொரு பிரபல இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி அவரிடம் இருந்து 51 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார்.
இந்த மோசடி புகார் குறித்து தியாகராய நகர் ‘சைபர் கிரைம்’ போலீசார் யு.பி.ஐ மூலம் நடந்த பண பரிமாற்றங்கள் அனைத்தும் பள்ளிக்கரணை யில் உள்ள வங்கி கணக்கு ஒன்றுக்கு சென்று இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பணம் பறிப்பில் ஈடுபட்ட பெரும் பாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஜாவித்(33) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர் உரிய முறை யில் பதிவு ஏதும் செய்யா மல் துரைப்பாக்கம் பகுதி யில் ‘டெலி காலர்’ அலு வலகம் நடத்தி வந்ததும், போலியான முகவரி மூலம் ஏராளமான டெலி போன் இணைப்புகள் பெற்று அதன் மூலம் பல்வேறு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர் களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடம் நூதனமான முறையில் பல லட்சம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஜாவித்திடம் இருந்து ஒரு லேப்டாப், 12 வயர்லெஸ் போன், 3 செல்போன், 15 சிம் கார்டு, 3 டெபிட் கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.