districts

சென்னை முக்கிய செய்திகள்

பெரவள்ளூரில் தனியார் நிறுவன  ஊழியரிடம் ரூ.44 லட்சம் மோசடி

கொளத்தூர்,செப்.12-  சென்னை, பெரவள்ளூர், எஸ்.ஆர்.பி காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி மெசாக். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.  இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் பணமுதலீடு செய்து வந்தார். இவருக்கு அதே நிறுவனத்தில் வேலை  செய்து வந்த அனகாபுத் தூரைச் சேர்ந்த இந்துமதி (31) என்பவர் பணமுதலீடு சம்பந்தமாக உதவி செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே வேலையை விட்டு நின்ற இந்துமதி தொடர்ந்து வீட்டில் இருந்த படி பணமுதலீடு சம்பந்தமாக  ஆலோசனை வழங்கி உதவி  செய்து வருவதாக ஜெர்ரி மெசாக்கிடம் கூறினார். மேலும் அவரிடம் சிறுக சிறுக முதலீடு செய்ய பணத் தையும் வாங்கினார். அவர் தனது மனைவி மற்றும் மகளின் பெயரில் ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி இருந்தார். இதற்கான ரசீது மற்றும் மெயில் சம்பந்தமான பதிவு களை சம்பந்தப்பட்ட நிறுவ னத்தில் இருந்து அனுப்பு வதாக இந்துமதி அனுப்பி வைத்துள்ளார்.  இதற்கிடையே ஜெர்ரி மெசாக் தனது முதலீடு பணத்தை சரி பார்த்தபோது அதில் ரூ.44 லட்சம் தனது கணக்கில் இல்லை என்பது தெரிந்தது. இந்துமதி நூதன முறையில் பணமோசடி யில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட மெசாக், பெரவள்ளூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்து மதியை கைது செய்தனர்.

சாதனை வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்: அமைச்சர் உதயநிதி பாராட்டு

சென்னை, செப்.12- உலக அளவில் செஸ் விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் இரு வருக்கும் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வீரர்க ளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில்  தலா ரூ. 20 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இரு வருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடரின்  துவக்க விழா மற்றும் நிறைவு விழா மிகவும்  பிரமாண்டமாக நடைபெற்றது. அதே போல் இந்த விழாவில் நடைபெறுகிறது. தினந்தோறும் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் குறித்த செய்திகள் வந்து கொண்டே  இருக்கிறது. பிரக்ஞானந்தா வெற்றி அவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல. அவருடைய குடும்பத்திற்கு கிடைத்த வெற்றி.  தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றி. இந்தியா வின் நம்பர் 1 வீரராக குகேஷ் இன்று உள்ளது. உலக அளவில் சாதனை படைத்துள்ள இவர்கள் இருவரும் தங்கள் வெற்றிகளைக் கொண்டாட வில்லை என்றாலும் நாம் கொண்டாடுவோம். அடுத்தடுத்து பல சாத னைகளை அவர்கள் படைக்க வேண்டும். தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு உழைத்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழ்நாடுதான் செஸ் போட்டியின் தலை நகரம் என்பதை இவர்கள் இருவரும் நிரூபித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

போதை பழக்கம் உள்ளதா? கல்வி அலுவலர் ஆய்வு செய்ய அறிவுறுத்தல் 
 

செங்கல்பட்டு,செப்.12- செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பழக்கம் தற்போது அதிகரித்து வருகின்றன.  இதனால் பள்ளி பருவத்திலேயே சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து பள்ளி  மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்கவும், மாணவர்கள் மத்தி யில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிகாரிகளால் தீவிர நடவடிக்கை எடுக்கப்ப படுகிறது.  இந்நிலையில் பள்ளி மாணவர்களிடம் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய சோதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை  உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ்-ஐ’

சென்னை,செப்.12-  சென்னையில் மெட்ராஸ்  ஐ வேகமாக பரவி வருகிறது.  இந்த நோய் பாதித்து எழும்பூர் கண் மருத்துவ  மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வா யன்று  நேரில் சந்தித்தார்.  பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:- பள்ளி குழந்தைகள் மத்தி யில் இந்த நோய்  பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ள்ளது. வருகிற 16-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார். 

விற்பனையில் சாதனை படைத்த  ஐக்யூஓஓ இசட்7 புரோ ஸ்மார்ட்போன்

சென்னை, செப்.12 - சிறந்த செயல் திறன்மிக்க மற்றும் அதிநவீன பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம் சமீபத்தில் இதன்  இசட் வரிசையில் புதிய இசட்7 புரோ என்னும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.  இது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு, அமேசான்.இன் இணையதளத்தின் முதல் நாள் விற்பனையில் அதிக அளவு விற்பனையாகி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனை குறித்து ஐக்யூஓஓ இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா கூறுகையில், அமேசான்.இன்–ல் சிறந்த விற்பனையான ஸ்மார்ட்போனாக எங்களின் இசட்7 புரோ உள்ளது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் இணையற்ற செயல்திறன்களை அடுத்த தலைமுறையினருக்கு வழங்கும் எங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு நுகர்வோர் எங்கள் மீது வைத்துள்ள  நம்பிக்கையின் நற்சான்றாக இதை கருதுகிறோம் என்றார்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, செப்.12- சென்னையில் ஆபரணத்  தங்கத்தின் விலை செவ் வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படு கிறது.ஒரு கிராம் தங்கம்  ரூ.5 உயர்ந்து ரூ.5,520-க்கு  விற்பனை செய்யப்படு கிறது. வெள்ளியின் விலை ஒரு  கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.78.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.78,000 ஆக வும் விற்பனை செய்யப்படு கிறது.

பூண்டி ஏரியில் மூழ்கி சென்னை பெண் பலி

திருவள்ளூர்,செப்.12- சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதி யைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார்.  இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள்  குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரிய பாளையத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்ற னர்.  தரிசனம் முடித்து சுகந்தி  மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர். ஆழமான பகுதிக்கு சென்ற  சுகந்தி தண்ணீரில் மூழ்கி னார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர்.  மூச்சுச் திணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர். 

தொட்டால் உதிரும் கால்வாய் சுவர்: அதிகாரிகள் ஆய்வு

ராணிப்பேட்டை,செப்.12-  திமிரி அருகே கழிவுநீர் கால்வாயின் சிமெண்ட் கலவை தொட்டாலே பெயர்ந்து வருவதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதையடுத்து, அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கீழ்ப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் ‘பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா’ திட்டத்தின் கீழ் 5 தெருக்களில் ரூ.20 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்ப்பாடி கிராமத்தில் ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கால்வாய் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், கால்வாய் அமைக்க பயன்படுத்தப்படும் சிமெண்ட் கலவை தொட்டாலே பெயர்ந்து வருகிறது. அதன் தரம் இவ்வளவு தான் என்ற மாதிரி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை வீடியோ பதிவு செய்த நபர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் சேர்ந்து ஆய்வு செய்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு கால்வாயின் தரம் குறித்து விளக்கினர். அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள இடம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இயந்திரம் கொண்டு துளையிட்டும், கடப்பாரையால் குத்தியும் சோதித்தனர். இதில், கால்வாய் தரமாக அமைக்கப்பட்டு வருவது தெரியவந்தது. மேலும், கால்வாய் தரம் குறித்தும் பொதுமக்களுக்கு மற்றும் அந்த இளைஞருக்கும் அதிகாரிகள் தரப்பில் விளக்கப்பட்டது.

மனை பிரிவுகளுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர்

விழுப்புரம், செப்.12- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மனை பிரிவுகளுக்கு அனுமதி பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட 2017 ஆம் ஆண்டு விதிகளுக்குட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 4.9.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.  ஆனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குநர், வட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், எண்.56/ஏ, தாட்கோ வளாகம், அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

தொகுதி மக்களை சந்தித்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை, செப்.12- திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூர் மற்றும் அத்தியந்தால் ஆகிய கிராம ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மனுக்களை பெற்றார். அப்போது அமைச்சர் பேசியதாவது:- கிராமப்புற மக்களுக்கு தேவையான திட்டங்களை மாநில அரசு நிறைவேற்றி வருகிறது. மக்களின் தேவை அறிந்து திட்டங்களை தீட்டி அதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். இந்த ஆட்சியில் பெண்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அதிக அளவில் நிறைவேற்றப் படுகிறது. தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து துறை அலுவலர்களுடன் இங்கு வந்துள்ளேன். நீங்கள் அளிக்கும் மனுக்கள் உங்களுக்கு ஆணைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஓசூர் அந்திவாடியில்  பன்நோக்கு கூடம் திறப்பு

ஓசூர், செப். 12- ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5.65 லட்சத்திலிருந்து புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டது. அதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ரூ. 49 லட்சத்தில் பள்ளி சுற்றுசுவர் மற்றும் பல்நோக்கு கூடம் கட்டுப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் ஓசூர் எம்.எல்.ஏ. பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு , சமையலறைக் கூடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பல்நோக்கு கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாநகராட்சி ஆணையர் சினேகா முன்னிலை வகித்தார். துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.