சிதம்பரம், ஏப். 12- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கு வராத ஆசிரியர் கையெழுத்தை போட்டு பல லட்சம் மோசடி செய்துள்ளனர். காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாண வர்கள் பயில்கின்றனர். இதில் இட நிலை ஆசிரியராக செல்வம் பணியாற்றி வந்தார். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 18 மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை. இவர் மருத்துவ விடு முறை அல்லது மற்ற எந்த விடுமுறையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர் மாதம் ரூ. 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் அதே பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ், தலைமை ஆசிரியர் இளங்கோவன் ஆகி யோர், செல்வத்திடம் கணிசமான தொகையை கமிச்னாக பெற்றுக் கொண்டு, அவருக்கு பதிலாக ஆசிரியர் ரமேஷ் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனால் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்க ஆசிரியர் ரமேசின் மருமகள் பிரகதீஸ்வரி ஆசிரிய ராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அனுப்பப்பட்ட நிலையில், அவர் 3 மாதம் மட்டுமே பணியில் இருந்துள்ளார். இவருக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர் செல்வத்திடம் பணத்தைப் பெற்று ஊதியம் வழங்கியுள்ளனர். இந்த மோசடி குறித்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சங்கர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.