சென்னை, பிப். 9- திருவொற்றியூர் ராம நாதபுரத்தில் ஆரம்ப சுகா தார நிலையம் கட்டுவ தற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை (பிப். 9) நடைபெற்றது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுக்குட்பட்ட ராமநாதபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. திரு வொற்றியூர் மேற்கு பகுதி 4, 6, 7 வார்டுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதன் மூலம் பயனடைந்து வந்தனர். அந்தக் கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தொடர் முயற்சி யால் புதிய கட்டிடம் கட்ட 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் முழு மையாக இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இதில் மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டல அலுவலர் நவிந்த ரன். உதவி செயற்பொறி யாளர் ஜெயக்குமார். உதவி பொறியாளர் அன்னலட்சுமி, திமுக வட்டச் செயலாளர் பவுல், ராமநாதபுரம் கிராம சேவ சங்கத்தின் தலைவர் பஞ்சாட்சரம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியம், நிர்வாகி கள் அலமேலு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த புதிய கட்டிட பணி நிறைவடைய 6 மாதங்கள் ஆகும் என்பதால், தற்காலி கமாக ஆரம்ப சுகாதார நிலையம் அதே பகுதியில் உள்ள சமூக நலக் கூடத் தில் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.