districts

img

சென்னையில் ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் டிச9, 10 ஆகிய தேதிகளில் நடத்த ஏற்பாடு

சென்னை, ஆக,16      

   இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தலை நகரான சென்னையில் “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” நடத்தப்பட உள்ளது.

   இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸின் வர லாற்றில் சிறப்பு நிகழ்வாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர  வளர்ச்சி குழுமம் , தமிழ்நாடு விளையாட்டு  மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோ மோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து இதனை நடத்தவுள்ளன.

   இந்த போட்டிக்கான அறிமுகக் கூட்டம்   இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் புதன்கிழமை (ஆக.16) நடைபெற்றது.

   இந்த நிகழ்ச்சியில் “சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்” போட்டியினை அறிமுகப்படுத்தி அமைச்சர் பேசுகையில்  சென்னையில்  ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் -2023 டிசம்பர் 9 மற்றும் 10 –ஆகிய தேதி களில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக சாலைகள் வழியாக நடத்த ப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும்.

    சென்னை  தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி  3.5 கி.மீ சுற்றளவில் இரவு போட்டி யாக நடத்தப்படுகிறது. இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பாலின சமத்துவத்தின் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்த போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக. ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.