மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ்.ஜனார்த்தனன் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று (ஆக.8) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சியின் மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.தாமு, வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.ஜீவா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.