சுகாதாரத் துறையில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களை கட்டாய பணியிட மாறுதல் செய்வதை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகிகள் டி.பி. புனிதா, எஸ். வளர்மதி, எஸ். நந்தினி, கே.ருக்மணி, அரசு துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மகாதேவன், பரிதிமாற் கலைஞர், எம்.ராமலிங்கம், சி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.