திருவண்ணாமலை, ஜூலை. 22-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சே. நாச்சிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூ. 66 லட்சம் நேரடியாக கடன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி கலந்து கொண்டு மகளிர் குழுவினருக்கு நேரடியாக கடன் தொகையை வழங்கினார்.
மேலும் நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு அதற்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு மாவட்ட அலுவலர்கள் செந்தில்குமார், மீனாட்சி சுந்தரம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.