சென்னை, ஆக.9-
சென்னை மாநகராட்சி கண்காணிப்பில் சுகாதாரத் துடன் சுவையான உணவு கிடைக்கும் வகையில், சென்னையில் ‘தெரு உணவு கடைகள்’ அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி விரைவுபடுத்தப்பட் டுள்ளது.
முதற்கட்டமாக பெசன்ட் நகர் கடற்கரையில் தெரு உணவு கடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கு கிறது. ஒவ்வொரு தெரு உணவு கடைகளும் சுகா தாரத்தின் அடிப்படையில் அமைகிறது. தணிக்கையின் அடிப்படையில் சுத்தமான தெரு உணவு கடைகள் அமைக்க அடையாளம் காணப்படுகின்றன. பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை யில் உணவு கடைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.