districts

img

கல்லுகுட்டை மக்களுக்கு பட்டா பெறுவதே பிரதானப்பணி 184வது வார்டு திமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் பேட்டி

சென்னை, பிப். 15 - கல்லுகுட்டை பகுதி மக்க ளுக்கு குடிமனைப் பட்டா பெற்றுத்தருவதே பிரதான பணி என்று சென்னை மாநக ராட்சி 184ஆவது வார்டு திமுக வேட்பாளர் எஸ்.வி.ரவிச்சந் திரன் குறிப்பிட்டுள்ளார். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட இந்த வார்டில் 248 தெரு க்கள், 46ஆயிரம் வாக்காளர் கள் உள்ளனர். அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் கல்லுகுட்டை பகுதி அமைந்துள்ளது. 12 ஆயிரம் குடும்பங்கள் உள்ள இந்தப் பகுதியில் சாலை, மின்சாரம் என எந்தவித அடிப் படை வசதியும் இன்றி இருந் தது. 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. அரசு நிதியில் இருந்து இந்தப்பகுதி யில் திட்டப்பணிகள் மேற் கொள்ள முடியாது. எனவே, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், எனது சொந்த நிதியிலிருந்து  பல சாலைகளை அமைத்துக் கொடுத்துள்ளோம். சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து 30 தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட் டுள்ளது. எனது சொந்த நிதியி லிருந்து ஒரு கிலொ மீட்டர் தூர் குழாய் பதித்து தண்ணீர் வழங்கி வருகிறேன். மழைக் காலங்களில் கல்லுகுட்டை ஏரி போல் காட்சியளிக்கும். குடியிருக்கும் மக்கள் 10 நாட்கள் வரை முகாம்களில் தங்கும் நிலை இருந்தது. இதனை தவிர்க்க, மழை காலங்களில் ஜேசிபி எந்திரங் களை கொண்டு கால்வாய் தோண்டி வெள்ளத்தை வெளியேற்றி, சாலைகளை மேம்படுத்தியுள்ளோம். அண்மையில் பெய்த மழை யின் போது நாளொன்றுக்கு 21000 உணவு பொட்ட லங்களை வழங்க மக்களை பாதுகாத்தேன். 12ஆயிரம் குடும்பங்களுக்கு  25 லட்சம் ரூபாய் செலவில் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன். இவ்வா றாக கடந்த 30 வருடங்களாக ளாக கல்லுகுட்டை பகுதி யில் மக்கள் சேவையாற்றி வருகிறேன். கல்லுகுட்டை பகுதியை பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று தெரிவித்துள் ளார். எனவே, இந்தப்பகுதி க்கு பட்டா பெற்றுத்தருவதே பிரதான பணி. அவ்வாறு பட்டா பெற்றுத் தந்து, கழிவு நீர் கால்வாய், மழை நீர் கால்வாய் போன்ற கட்ட மைப்பு வசதிகள் ஏற்படுத் தப்படும்.

பாதாள சாக்கடை
பெருங்குடி, கந்தன் சாவடி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைவு படுத்தப்படும். மேலும், வீடு கள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப் ்படும்.கழிவு நீர் கால்வாய் களை சுத்தம் செய்வதையே கைவிட்டுள்ளனர். இதனை மாற்றி கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யப்படும். கல்லு குட்டை பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியதை மாற்றி, அதே பகுதியில் ரேசன் கடை அமைத்து தரப்படும் ஆங் காங்கே பொதுக்கழிப்பிடம் அமைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தி24 மணி நேரம் இயங்கும் வகையில் மேம்படுத்தப் படும். அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்த பாடுபடுவேன். மிகப்பெரிய வட்டமான இந்தப்பகுதியில் ஒரு விளை யாட்டு மைதானம் கூட இல்லாத நிலை உள்ளது. இதனைமாற்றி, விளை யாட்டு மைதானம் அமைக் கப்படும்.பூங்காக்கள் சீரமைக்கப்படும்.

பெருங்குடி ஏரி
பெருங்குடி ஏரியில் படகு கள்விடவும், சுற்றுலாத் தல மாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெருங்குடி, கந்தன்சாவடி சாலைகள் புனரமைக்கப்படும். பிரதான இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகளும், தேவை யான இடங்களில் தெரு விளக்குகளும் அமைக்கப் படும். மின்னழுத்த குறை பாடு சீர் செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.