சென்னை, ஏப். 7 - இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி யால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு உதவிட வேண் டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய் சங்கரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று (ஏப்.7) தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை யில் தற்போது நிலவும் சூழ் நிலை குறித்துப் பேசினார். அப்போது, இலங்கை யில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலும், தலைநகர் கொழும்பிலும் வசிக்கும் தமிழர்கள் மற்றும் மலைய கத் தமிழர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அத்தியாவசிப் பொருட்க ளான அரிசி, பருப்பு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வாயிலாக அனுப்புவதற்குத் தயாராக உள்ளது. மனிதாபிமான நோக்கில் அனுப்பப்படும் இத்தகைய பொருட்களை தமிழர்களுக்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் விநியோகிக்க உரிய அனுமதியும், ஏற்பாடு களையும் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். இதுதொடர்பாக பிரத மரிடம் முன்வைத்த கோரிக் கைகளை நினைவு கூர்ந்த முதலமைச்சர், அந்தக் கோரிக்கைகளை எல்லாம் உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இலங்கைக் கடற்படை யினரால் தமிழக மீனவர் கள் அடிக்கடி தாக்கப்படு வது, கைது செய்யப்படு வது குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத் திய முதலமைச்சர், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்க ளது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க கோரினார். முதலமைச்சரின் கோரிக் கைகள் மீது உரிய நடவடிக்கைகளை எடுப்ப தாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி அளித்தார். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.