சென்னை,ஜூலை 8-
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் செல்லப்பிராணிக்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணமாக ரூ.50 செலுத்தவேண்டும். இந்த உரி மம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடி யாகும். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் மூலம் 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரி சீலனை செய்யப்பட்டு 121 பேருக்கு செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் வழங்கப்பட்டது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும் என்று மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.