districts

img

பழமையான நூலகத்துக்கு ரூ. 48 லட்சத்தில் புதிய கட்டிடம்

சிதம்பரம், ஜன.12- சிதம்பரம் நகரில் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த  சிதம்ப ரம் கிளை நூலகம் இயங்கி வரு கிறது. முதலில் காசு கடைத் தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.   இந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி புத்த கங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும்  நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை  அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் என  தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை  வைக்கப்பட்டது. இந்த நிலையில், நகராட்சி அலுவலகத் திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான 4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டும் என 2014 ஆம் ஆண்டில் சிதம்பரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  நகர மன்றத் தலைவர் பௌசியா பேகம் ஆகியோர் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். பிறகு, நகர்மன்ற கூட்டத்தில் 4 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்படும் நூலகம் வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, நிதி ஒதுக்கவில்லை. இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ. 32  லட்சம் மானியம் வழங்கி யது. இதில்,ரூ. 48 லட்சத்தில் 1800 ச. அடியில்  நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். பிறகு, நூலகத்திற்கான சாவி நூலகத்துறை அலுவ லர்கள் அருள் மற்றும் ரகுநந்தன் இடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக  கட்டிடத்தில் ஜன. 12 அன்று நடைபெற்றது.  இதில் நகர மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார், துணைத் தலைவர் முத்துக்குமார், நகராட்சி ஆணையர் பிரபா கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.